Publish Date: Thu, 30 Dec 2021 (22:00 IST)
Updated Date: Thu, 30 Dec 2021 (22:01 IST)
சென்னையில் மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் திடீரென கனமழை பெய்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கமளித்துள்ளார்
எதிர்பார்த்ததைவிட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி திடீரென நிலப்பகுதியை நோக்கி வேகமாக நகர்ந்து வந்ததால் சென்னையில் கனமழை முதல் மிக கனமழை வருவதாக அவர் தெரிவித்துள்ளார்
சென்னை மட்டுமின்றி கடலோர மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது அவர் தெரிவித்துள்ளார். நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக கடற்கரையை ஒட்டி தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை நீடிக்கும் என்றும் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் புவியரசன் தெரிவித்துள்ளார்.