Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா; எச்சரித்த மத்திய அரசு!

Advertiesment
Tamilnadu
, வியாழன், 30 டிசம்பர் 2021 (14:35 IST)
சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களாக மெல்ல குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் பாதிப்புகளும் ஆயிரத்தை நெருங்கியுள்ளன. தமிழகத்தில் தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. சென்னையின் ஒரு பகுதியில் அதிகம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறையிடமிருந்து கடிதம் வந்துள்ளது. அதில் சென்னையில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பை சுட்டிக்காட்டி தீவிர கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சென்னையில் விரைவில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குற்றவாளிகள் என கருதுபவர்களை பொதுவெளியில் அவமானப்படுத்தும் நடவடிக்கை: சீனாவில் மீண்டும் அரங்கேற்றம்