Publish Date: Sat, 07 Oct 2023 (20:07 IST)
Updated Date: Sat, 07 Oct 2023 (20:10 IST)
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் இந்த ஆட்சியில் மக்களுக்கு தேவையான பல்வேறு அறிவிப்புகள் மக்கள் நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது நடக்கும் என கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் நாளை மறுநாள் அதாவது 9 ஆம் தேதி முதல் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கவுள்ளது என்று கூறியுள்ளது.
இதில், தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டுவரவுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
வரும் திங்கட்கிழமை அன்றறு சட்டப்பேரவை கூடியதும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.