Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக சின்னம், கொடியைப் பயன்படுத்த தடை கோரிய வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அதிமுக சின்னம், கொடியைப் பயன்படுத்த தடை கோரிய வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
, வெள்ளி, 6 அக்டோபர் 2023 (16:45 IST)
அதிமுக சின்னம், கொடியைப் பயன்படுத்த ஓ. பன்னீர்செல்வம் தரப்பினருக்குத் தடை கோரி எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்த வழக்கு தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் இதுவரை பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை என  எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் அதிமுக கட்சியிலிருந்து ஓ பன்னீர்செல்வத்தை  நீக்கிய தீர்மானம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்ததால் இந்த வழக்கை நீதிபதி 
நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 
மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்பு மனுவுக்கு அக்டோபர் 6-ம் தேதிக்குள்  ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'ரோகிணி தியேட்டர் சேதம்', 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சி குளறுபடி பற்றி நீதிபதி கருத்து