Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பரிதாப நிலையில் அதிமுக? புட்டு புட்டு வைக்கும் ஜெ. உதவியாளர்!

பரிதாப நிலையில் அதிமுக? புட்டு புட்டு வைக்கும் ஜெ. உதவியாளர்!
, புதன், 2 பிப்ரவரி 2022 (09:56 IST)
மறைந்த ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் நிலை என்ன என்பதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. 
 
அதிமுக - பாஜக கூட்டணி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பிளவுப்பட்டுள்ள நிலையில் அதிமுக தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மறைந்த ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன்  நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் நிலை என்ன என்பதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இதோ... 
webdunia
கழகம் வெற்றி பெற வேண்டும் என்று அந்த ஆண்டவன் நினைக்கிறான். அதற்கு வசதியாய் பல காரணங்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறான். அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள தயாரா? இவைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இல்லை என்றால் உங்களை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. 
 
கழக ஆட்சியில் பேரூராட்சி, நகராட்சி செயலாளர்கள் பலன் அடைந்தார்காளா? என்பது உங்களுக்குதான் தெரியும். எனக்குத் தெரிந்தது அடையவில்லை என்பதே! எனவே மாநகராட்சி, நகர, பேரூராட்சிக்கு தேவையான உதவியை கழகம் செய்ய வேண்டும் இல்லை வளர்ச்சி அடைந்தவர்கள் அவர்களுக்கு உதவ வலியுறுத்த வேண்டும் இல்லை தலைவராக தகுதி உள்ளவரை தேர்ந்தெடுத்து உதவி செய்யச் சொல்ல வேண்டும். இதுவே வெற்றிக்கு வழி வகுக்கும். 
webdunia
மேயர், தலைவர் பதவிக்கு அனுபவம் மற்றும் தகுதி உள்ளவர்களின் ஆலோசனையுடன் கவுன்சிலர்களை தேர்ந்தெடுத்திருந்தால் மிகச் சிறப்பு. மாநகராட்சி வார்டுகளை பிரித்து கொடுத்து, தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் உதவி செய்து வெற்றி பெற வைப்பவர்களுக்கு பதவிகளை தரவேண்டும். அதற்கு முன்கூட்டி வாக்குறுதி தரவேண்டும். இப்படி செய்வதே இன்றைய தேவையாக இருக்கும் என்பது என் கருத்து.
 
கழகத்தின் சார்பில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கு இதயதெய்வங்களின் ஆசி என்றும் துணை நிற்கும். போட்டியிடும் நீங்கள் வெற்றி பெற என் மனம் கனிந்த வாழ்த்துக்கள். நினைவிருக்கட்டும் நிற்பது உங்களில் ஒருவரல்ல... கழகம் என பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் விலை குறைவு! – மக்கள் நிம்மதி பெருமூச்சு!