Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆளுனர் தன்னுடைய உரையில் தவிர்த்த வார்த்தைகள் என்ன? வெளியான விவரம்!

ஆளுனர் தன்னுடைய உரையில் தவிர்த்த வார்த்தைகள் என்ன? வெளியான விவரம்!
, திங்கள், 9 ஜனவரி 2023 (15:21 IST)
இன்று சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் தமிழ் நாடு, திராவிட நாடு போன்ற வார்த்தைகளை ஆளுநர் வாசிக்காமல் புறக்கணித்தார். இதனை அடுத்து பெரும் சர்ச்சை எழுந்தது. ஆளுனர் வாசித்த உரை தமிழக அரசால் எழுதித் தரப்பட்ட உரை. அது பற்றி முன்னரே ஆளுனரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே அதைக் கொடுத்ததாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழக அரசு கொடுத்த உரையில் ஆளுனர் வாசிக்காமல் விட்ட வரிகள் மற்றும் வார்த்தைகள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

அதில் ‘தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர்’ ஆகிய பெயர்களை வாசிக்காமல் விட்டுள்ளார். மேலும் “சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், பகுத்தறிவு’ ஆகியவற்றையும் அவர் வாசிக்கவில்லை.

மேலும் ‘மிழ்நாடு அரசு என்ற வார்த்தையை இந்த அரசு’ என மாற்றி வாசித்துள்ளார். மேலும் தமிழக அரசு பற்றிய வாக்கியத்தில் ‘சமூகநீதி உள்ளிட்ட கொள்கைகளைக் கொண்ட மிகச்சிறந்த ஆட்சி முறை’ என்பதைப் படிக்காமல் தவிர்த்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கலையொட்டி சிறப்பு பேருந்துகளில் 1.33 லட்சம் பேர் முன்பதிவு- போக்குவரத்துத் துறை