Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 21 மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 18 அக்டோபர் 2019 (14:15 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கியுள்ளது.

வானிலை ஆய்வு மையம் எதிர்பார்த்த நாளுக்கு முன்னதாகவே பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கணிசமான அளவு மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.

பல இடங்களில் மணிக்கணக்காக ஒரே சீராக மழை பெய்து கொண்டே இருந்துள்ளது. இந்த பருவமழை நாளுக்கு நாள் தீவிரமைடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் பலமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த இரண்டு நாட்களும் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடியை அடுத்து அமெரிக்காவுக்கு செல்லும் நிர்மலா சீதாராமன்.. டிரம்ப் உடன் சந்திப்பு இல்லையா?

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து மாற்றம்.. மாற்று வழிகள் என்ன?

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments