Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 7ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு.. வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை..!

Webdunia
வியாழன், 4 மே 2023 (09:41 IST)
மே 7ஆம் தேதி அல்லது 8ஆம் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று சேலம் நாமக்கல் மற்றும் டெல்டா பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். 
 
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அதன் பின் அது தாழ்வு மண்டலமாக உருமாறி புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்க இருக்கும் நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்தால் பொதுமக்கள் அக்னி நட்சத்திர வெப்பத்தில் இருந்து தப்பித்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments