Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஏற்றத்தை நோக்கி பங்குச் சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Webdunia
வியாழன், 4 மே 2023 (09:31 IST)
பங்குச் சந்தை நேற்று சரிவில் இருந்த நிலையில் இன்று மீண்டும் ஏற்றத்தை நோக்கி சென்றுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாகவே பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நேற்று சிறிய அளவு பங்குச் சந்தை சரிந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று 50 புள்ளிகள் உயர்ந்து 61,250 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை நிப்டி 25 புள்ளிகள் உயர்ந்து 18,115 என்ற புள்ளிகளில்  வர்த்தகமாகி   வருகிறது.

பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் நீண்ட காலத்திற்கு பங்குச்சந்தை லாபத்தை கொடுக்கும் ஒரு அம்சமாக தான் இருக்கும் என்றும் சரியான பங்குச்சந்தை நிபுணர்களுடன் ஆலோசனை செய்து முதலீடு செய்யலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments