Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீவிரமாகும் கொரோனா பரவல்: விஜயகாந்த் அறிவுறுத்தல்!

vijayakanth
, திங்கள், 27 ஜூன் 2022 (15:58 IST)
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முக்கிய கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் 
 
தமிழகத்தில் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் எனவே மக்கள் அனைவரும் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் மாற்ற வேண்டும் என்றும் விஜயகாந்த் அறிவித்துள்ளார்
 
நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் முகக்கவசம் அணியாமல் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் கூட்டம் கூடுவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
தமிழக அரசும் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறிவாலயம் அரசின் முதல் நாள் முதல் லாக்கப் மரணம்: அண்ணாமலை குற்றச்சாட்டு