Publish Date: Mon, 27 Jun 2022 (15:03 IST)
Updated Date: Mon, 27 Jun 2022 (15:05 IST)
இங்கிலாந்து அணியின் லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டின் கேப்டன் இயான் மோர்கன் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐசிசி கோப்பைகள் எதையுமே பெற்றதில்லை என்ற குறைய சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் தீர்க்கப்பட்டது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியை வழிநடத்தியர் இயான் மோர்கன். ஆனால் அதன் பின்னர் அவரின் ஆட்டத்திறன் மிகவும் மோசமானது. அவர் மோசமான பேட்டிங் பார்மில் இப்போது இருந்தாலும் அவரது கேப்டன்சியில் பெறும் வெற்றிகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்தன.
ஆனால் இப்போது அவர் மீது விமர்சனங்கள் அதிகமாகியுள்ள நிலையில் விரைவில் அவர் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பதில் ஜோஸ் பட்லர் அல்லது மொயின் அலி புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.