விஜயகாந்த்திற்கு இப்பொழுது சரியான ஓய்வு தேவை-இயக்குனர் பாண்டிராஜ்

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (21:00 IST)
நடிகர் விஜயகாந்த்திற்கு இப்பொழுது சரியான ஓய்வு தேவை என்று இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  நடிகர் விஜயகாந்த் சமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பினார்.

இந்த நிலையில், இன்று தேமுதிக பொதுக்குழு கூட்டம் தொடங்கிய நிலையில் விஜயகாந்த் உடல் தளர்ந்த  நிலையில், நீண்ட காலம் கழித்து தொண்டர்கள் முன் தோன்றினார். மேலும் நடைபெற்று வரும் பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிக கட்சியின் பொதுசெயலாளராக பிரேமலதா விஜயகாந்த் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்,  விஜயகாந்த்திற்கு இப்பொழுது சரியான ஓய்வு தேவை என்று இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’கேப்டன் திரு. விஜய்காந்த் அவர்களுக்கு , இப்பொழுது சரியான ஓய்வு தேவை . அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதீர்கள் please
பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை ‘ இப்படி பார்க்க ரொம்பவே  கஷ்ட்டமா இருக்கு’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments