Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றி கல்வெட்டுகளை திறந்து வைத்தார் - தொல் திருமாவளவன்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றி கல்வெட்டுகளை திறந்து வைத்தார் - தொல் திருமாவளவன்!

J.Durai

, செவ்வாய், 16 ஜூலை 2024 (14:50 IST)
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே  ஆவட்டி கல்லூர்  நான்கு முனை சந்திப்பில் அமைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கல்வெட்டுகளை திறந்து வைத்து 55 அடி  கொடிக்கம்பத்தை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவருமான தொல். திருமாவளவன் திறந்து வைத்து கொடிக்கம்பத்தில் கொடியேற்றி வைத்தார். 
 
மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றியை கொண்டாடும் விதமாக ஆவட்டிக் கல்லூர் நான்கு முனை சந்திப்பில் கல்வெட்டு பதித்து கொடிக்கம்பத்தில் கொடியேற்றினார்.
 
இந்நிகழ்வில் கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் வீர திராவிட மணி கட்சி நிதியாக ஐம்பதாயிரம் ரூபாய்  வழங்கினார்.
 
மேலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் ஊக்கத் தொகையும் கொடுத்து கௌரவப்படுத்தினார் திருமா.
 
பின்னர் கட்சி நிர்வாகிகளுக்காக  எழுச்சி உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வீர திராவிட மணி  தலைமை தாங்கினார்.  
 
மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் கல்லூர் ஆவட்டி ,பொடையூர்  ஆலம்பாடி பகுதியில் உள்ள கட்சியின்  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புழல் சிறைவாசி செந்தில் பாலாஜிக்காக பழிவாங்கல் நடவடிக்கை: எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது குறித்து ஈபிஎஸ்..!