Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலாவின் முதல் வேலையே இதுதான்.. போட்டுடைத்த வெற்றிவேல்!!

சசிகலாவின் முதல் வேலையே இதுதான்.. போட்டுடைத்த வெற்றிவேல்!!
, புதன், 23 செப்டம்பர் 2020 (15:28 IST)
சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவை மீட்கும் பணிகளை தொடங்குவார் என அமமுக பொருளாளர் வெற்றிவேல் தகவல். 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, அடுத்த ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆவார் என்று செய்தி வெளிவந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென டிடிவி தினகரன் தனி விமானத்தில் டெல்லி சென்றது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  
 
சசிகலா விடுதலை குறித்தும், பாஜகவுடன் அமமுக கூட்டணி நடத்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அவர் டெல்லி சென்றதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்தன.   
 
ஆனால், டெல்லி சென்று திரும்பிய அவர், டெல்லி சென்றது தனிப்பட்ட காரணங்களுக்காக என்றும் அரசியல் குறித்து எதுவும் இல்லை என்றும் கூறினார். இருப்பினும் அவர் டெல்லி சென்றது ஏன் என்பது குறித்த தகவல் இன்னும் மர்மமாகவே உள்ளது.  
 
இதனிடையே டெல்லிக்கு டிடிவி சென்றதன் பிறகு அதிமுக - அமமுகவை இணைக்க பாஜக முற்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தேர்தலுக்குள் அதிமுக - அமமுக இணைக்கப்படும் என கூறப்படுகிறது.
 
இந்நிலையில், சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவை மீட்கும் பணிகளை தொடங்குவார் என அமமுக பொருளாளர் வெற்றிவேல் பேட்டியளித்துள்ளார். எனவே கட்சி அதிகாரம் சசிகலாவிற்கு ஆட்சி அதிகரம் ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பிற்கும் செல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்டுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாராஷ்டிரா கட்டிட விபத்து... முடியாத மீட்பு பணி; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை