Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த சிம் யார் என்ற பஞ்சாயத்து ஓவர்: ஈபிஎஸ் - ஓபிஎஸ் கூட்டறிக்கை!

அடுத்த சிம் யார் என்ற பஞ்சாயத்து ஓவர்: ஈபிஎஸ் - ஓபிஎஸ் கூட்டறிக்கை!
, சனி, 15 ஆகஸ்ட் 2020 (16:17 IST)
அமைச்சர்களுடனான ஆலோசனைகள் நடந்து முடிந்த பின் ஈபிஎஸ் - ஓபிஎஸ் கூட்டறிக்கை வெளியீடு. 
 
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக கட்சிகளுக்குள் கட்சி தாவல்களும், உட்கட்சி பூசல்களும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. சமீபத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அதிமுக முக்கியஸ்தர்களிடையே பல்வேறு நிலைபாடுகள் எழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் யார்? என துணை முதல்வர் ஓ.பி.எஸ் இல்லத்தில் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.  
 
இந்த ஆலோசனை முடிந்ததும் முதல்வருடன் ஆலோசனை நடத்தினர். இதனைத்தொடர்ந்து 2வது கட்டமாக ஓ.பி.எஸ் உடன் நடந்த ஆலோசனையை தொடர்ந்து மீண்டும் ஈ.பி.எஸ் உடன் ஆலோசனை நடத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்ட 6 பேர் அவரது இல்லத்திற்கு செல்கின்றனர். 
 
அடுத்தடுத்த ஆலோசனையால் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இல்லம் உள்ள சென்னை கிரீன்வேஸ் சாலை பரபரப்பாக உள்ளது. இந்த ஆலோசனைகள் நடந்து முடிந்த பின் ஈபிஎஸ் - ஓபிஎஸ் கூட்டறிக்கை விட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி தற்போது அறிக்கை வெளியாகியுள்ளது. 
 
அதில், மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது. அதிமுக தலைமையின் ஒப்புதல் இல்லாமல் கருத்துகளை தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 
 
பொறுப்பாளர்கள் தனிப்பட்ட கருத்துகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட முறையில்  தொலைக்காட்சிகளில் நிர்வாகிகள், கட்சித் தலைமை ஒப்புதல் இல்லாமல் தனிப்பட்ட கருத்துகளை, அரசியல் கருத்துகள் தெரிவிக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அல்லாடும் அமைச்சர்கள்: பரபரப்புக்கு பஞ்சமில்லா கிரீன்வேஸ் சாலை!