Publish Date: Thu, 03 Dec 2020 (07:39 IST)
Updated Date: Thu, 03 Dec 2020 (07:44 IST)
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு சமீபத்தில் பாமகவினர் போராட்டம் நடத்தினர் என்பதும் இந்த போராட்டத்தில் ஒரு சில வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
குறிப்பாக சென்னை அருகே ரயில் ஒன்றின் மீது போராட்டக்காரர்கள் கல் எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அன்புமணி உள்பட பாமகவினர் 850 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் இந்த போராட்டம் குறித்து அரசியல் கட்சி தலைவர்களும் ஊடகங்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
இது தேர்தல் நேரம் என்பதால் சீட்டு மற்றும் ஓட்டு பேரத்தை அதிகரிப்பதற்காகதான் ராமதாஸ் இட ஒதுக்கீடு போராட்டத்தை இப்போது கையில் எடுத்துள்ளார் ; உண்மையில் அவருக்கு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கித் தரும் எண்ணமில்லை