Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு செல்லும் குடிநீர் நிறுத்தம்? அதிகரிக்குமா குடிநீர் தட்டுப்பாடு!

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு செல்லும் குடிநீர் நிறுத்தம்? அதிகரிக்குமா குடிநீர் தட்டுப்பாடு!
, செவ்வாய், 23 மார்ச் 2021 (08:28 IST)
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வந்த நிலையில் இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே அனுப்ப முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று. அந்த ஏரியின் கொள்ளளவு 1,465 மில்லியன் கன அடி. கடந்த ஆண்டு பருவமழை அதிகமாக பெய்ததாலும், காவிரியில் நீர் வந்ததாலும் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது. இதனால் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீருக்காக தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் இப்போது வெயில் அதிகமாகி உள்ளதால் ஏரியின் கொள்ளளவு பாதிக்குப் பாதியாக குறைந்துள்ளது.

இதனால் இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு தண்ணீர் அனுப்ப முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கோடைக்காலம் தொடங்கிவிட்டதாலும், ஏரியில் இருந்து தண்ணீர் நிறுத்தப்படுவதாலும் சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாக்காளர்களை அச்சுறுத்த பைக் பேரணி? – தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு!