Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவெகவினர் ஆபாசமாக சித்தரிக்கின்றனர்! விஜய் மீது வைஷ்ணவி பகீர் புகார்!

Prasanth K
திங்கள், 21 ஜூலை 2025 (14:18 IST)

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த வைஷ்ணவி, நடிகர் விஜய் மீது புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் கோவை மாவட்ட பொறுப்பில் இருந்தவர் வைஷ்ணவி. கடந்த மே மாதம் சக தவெக நிர்வாகிகளோடு ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக கட்சியிலிருந்து விலகிய வைஷ்ணவி, அடுத்த சில நாட்களிலேயே திமுகவில் இணைந்தார். கட்சியின் நீண்ட கால தொண்டர்களே உதயநிதி உள்ளிட்ட கட்சி முக்கியத் தலைவர்களை காண அவகாசம் கேட்டு காத்திருக்கும் நிலையில் வைஷ்ணவி நேரடியாக உதயநிதியையும் சந்தித்தார். 

 

திமுகவில் சேர்ந்தது முதல் எதிர்கட்சிகளை விமர்சித்தும் வைஷ்ணவி பேசி வருகிறார். இந்நிலையில் அவர் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பல அவதூறுகளை பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போது கோவை மாநகர காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார் வைஷ்ணவி.

 

அதில் தன்னை சமூக வலைதளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும் சித்தரிக்கும் தவெக தொண்டர்கள் மீதும், அவர்களை தட்டிக் கேட்காமல், கண்டுகொள்ளாமல் உள்ள தவெக தலைவர் விஜய் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கும் முன்னர் விஜய்க்கு ஆதரவாக பேசி வந்தவர் தற்போது விஜய் மீதே புகார் அளித்துள்ளது தவெக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வைகோவுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது: நாஞ்சில் சம்பத்

ஓரணியில் தமிழ்நாடு.. தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கு ஓ.டி.பி. பெற தடை.. மதுரை ஐகோர்ட்

முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. என்ன நடந்தது?

சிறையில் ஒரு மாதம்.. இதுவரை யாரும் சந்திக்க வரவில்லை.. சோனம் சிறை வாழ்க்கை..!

ரூ.20,000ல் சாம்சங் வெளியிடும் புதிய மொபைல் போன்.. அசத்தலான அம்சங்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments