Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேக்கரியை அடித்து உடைத்த திமுக பிரமுகர்; கட்சியிலிருந்து நீக்கிய திமுக!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (10:35 IST)
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான பேக்கரியை அடித்து நொறுக்கிய வழக்கில் திமுக பிரமுகரை கட்சியை விட்டு நீக்கியுள்ளது திமுக.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகருக்கு சொந்தமான பேக்கரி ஒன்று முழு ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் அங்கு இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் கடையை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிசிடிவி காட்சிகளை கொண்டு அசோக் என்ற நபரையும் மற்றும் மூவரையும் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அசோக் மற்றும் கும்பல் வாடிப்பட்டி திமுக செயலாளர் பிரகாசம் என்பவரின் தூண்டுதலின் பேரில் பேக்கரியில் தாக்குதல் நடத்தியதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பிரகாசத்தை கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைப்பதாக திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments