Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரையில் பேக்கரி தாக்கப்பட்ட விவகாரம்: திமுக பிரமுகர் சஸ்பெண்ட்!

மதுரையில் பேக்கரி தாக்கப்பட்ட விவகாரம்: திமுக பிரமுகர் சஸ்பெண்ட்!
, செவ்வாய், 8 ஜூன் 2021 (07:41 IST)
மதுரையில் பேக்கரி தாக்கப்பட்ட விவகாரம்: திமுக பிரமுகர் சஸ்பெண்ட்!
மதுரை அருகே உள்ள வாடிப்பட்டி என்ற பகுதியில் திமுக பிரமுகர் ஒருவர் பேக்கரி ஒன்றை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மதுரை வாடிப்பட்டியில் பேக்கரி தாக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பேக்கரியை தாக்கிய திமுக பிரமுகர் பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 
இந்த கோரிக்கைக்கு செவிசாய்த்து திமுக தலைமை கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பிரகாசம் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே ஒரு சிலர் தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதை அடுத்து, கட்சி தலைமை அவ்வப்போது சரியான நடவடிக்கை எடுத்து வருவது பாசிட்டிவாக பார்க்கப்பட்டு வருகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்நாடக அரசின் கொடியை ஒத்த உள்ளாடைகள்… சர்ச்சையில் சிக்கிய அமேசான்!