Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்ப்பையும் மீறி விக்னேஷ் குடும்பத்தை சந்தித்த உதயநிதி: ரூ.5 லட்சம் நிதி

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (21:39 IST)
எதிர்ப்பையும் மீறி விக்னேஷ் குடும்பத்தை சந்தித்த உதயநிதி
நேற்று நீட் தேர்வு பயம் காரணமாக அரியலூரை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இதனை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விக்னேஷ் குடும்பத்திற்கு ரூபாய் 7 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்தார். அதுமட்டுமன்றி விக்னேஷ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாகவும் உறுதியளித்தார் 
 
மேலும் பாமக கட்சியில் இருந்து ரூபாய் 10 லட்சம் விக்னேஷ் குடும்பத்திற்கு நிதி உதவி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திமுக இளைஞர் அணி பொதுச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விக்னேஷ் குடும்பத்தினரை நேரில் சந்திக்கச் சென்றார். ஆனால் அங்கிருந்த பாமக தொண்டர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் எதிர்ப்பையும் மீறி அவர் விக்னேஷ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி ரூ 5 லட்சம் நிதி உதவி செய்துள்ளார் 
 
இதுகுறித்து உதயநிதி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நீட் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் எலந்தங்குழி மாணவர் விக்னேஷின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். சிறிய வீட்டில் நிறையக் கனவுகளோடு இருந்த மகனை இழந்த அந்த பெற்றோரைத் தேற்ற வார்த்தைகள் வரவில்லை. தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தேன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் 6.5 லட்சம் பீகார் மக்கள்.. யாருக்கு வாக்களிப்பார்கள்?

சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments