Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட ஊபா பிரிவு சட்டம் ரத்து - நீதிமன்றம் அதிரடி

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (15:28 IST)
பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக பேசியதாக திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட ஊபா பிரிவு சட்டத்தை நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
மே 17 இயக்கத்தின் ஒருகிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பியபோது பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
 
கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு வழக்கு பாய்ந்தது. 2017 ஆம் ஆண்டு திருமுருகன் காந்தி பிரிவினையை உண்டாக்கும் விதத்தில் பேசியதாக அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டது. அதில் ஒன்று ஊபா பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்பொழுது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
 
இந்நிலையில் இன்று இதுகுறித்து விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம், திருமுருகன் காந்தி மீது பதியப்பட்டுள்ள ஊபா பிரிவு வழக்கை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments