Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட ஊபா பிரிவு சட்டம் ரத்து - நீதிமன்றம் அதிரடி

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (15:28 IST)
பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக பேசியதாக திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட ஊபா பிரிவு சட்டத்தை நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
மே 17 இயக்கத்தின் ஒருகிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பியபோது பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
 
கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு வழக்கு பாய்ந்தது. 2017 ஆம் ஆண்டு திருமுருகன் காந்தி பிரிவினையை உண்டாக்கும் விதத்தில் பேசியதாக அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டது. அதில் ஒன்று ஊபா பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்பொழுது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
 
இந்நிலையில் இன்று இதுகுறித்து விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம், திருமுருகன் காந்தி மீது பதியப்பட்டுள்ள ஊபா பிரிவு வழக்கை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments