Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடி கொடுத்து குடி கெடுக்கும் எடப்பாடி பழனிச்சாமி!!

குடி கொடுத்து குடி கெடுக்கும் எடப்பாடி பழனிச்சாமி!!
, வியாழன், 7 மே 2020 (11:59 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டர் பக்கத்தில் #குடிகெடுக்கும்_எடப்பாடி என்ற ஹேஷ்டேக் காலை முதல் டிரெண்டாகி வருகிறது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் 43 நாட்களாய் மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. 
 
சென்னை உள்ளிட்ட சில பகுதிகளை தவிர அனைத்து மாவட்டங்களிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவை வாங்கி செல்கின்றனர்.
 
பல இடங்களில் ஒருவருக்கு ஒரு மது பாட்டில் மட்டுமே வழங்கப்படும் என விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு பலர் அதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
 
இதன ஒரு பகுதியாக சமூக வலைத்தளமான டிவிட்டர் பக்கத்தில் #குடிகெடுக்கும்_எடப்பாடி என்ற ஹேஷ்டேக் காலை முதல் டிரெண்டாகி வருகிறது. அரசை கடுமையாக விமர்சித்த இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விசாக் விஷவாயு விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது! – ராகுல்காந்தி இரங்கல்