Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுக்கு எதிராக போராட்டம் : களத்தில் குதித்த தினகரன்

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (13:34 IST)
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வருகிற 9ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.


 

 
மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த ஏழை மாணவி அனிதா, நீட் தேர்வில் தேர்ச்சியடையாததால் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தின் பல இடங்களிலும் போரட்டம் வெடித்துள்ளது.
 
இந்நிலையில், வருகிற செப்டம்பர் 9ம் தேதி தன்னுடைய ஆதரவாளர்களோடு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
 
இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தினகரன் “மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும், அவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. எனவேதான் நீட் தேர்விற்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளோம். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகின்றன” என அவர் தெரிவித்தார்.
 
ஆளுங்கட்சியை சேர்ந்த தினகரனே, அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்து டிக்கெட் Payement Fail ஆனால் அரை மணி நேரத்தில் பணம் ரிட்டர்ன்! - போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு!

நான் மோசடி செய்துட்டு ஓடினேனா? என்ன நடந்தது தெரியுமா? - முதல்முறையாக மனம் திறந்த மல்லைய்யா!

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments