Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினகரனுக்கு மேலும் இரண்டு எம்.எம்.பிக்கள் ஆதரவு - எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி

தினகரனுக்கு மேலும் இரண்டு எம்.எம்.பிக்கள் ஆதரவு - எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி
, திங்கள், 4 செப்டம்பர் 2017 (12:33 IST)
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினரனுக்கு, அதிமுக எம்.எம்.பிக்கள் இரண்டு பேர் நேரில் சென்று தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.


 

 
தினகரனுக்கு ஏற்கனவே அதிமுக எம்.எல்.ஏக்கள் 19 பேர் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அந்த எண்ணிக்கை உயர்ந்து 22-ஆக உயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், அவருக்கு இதுவரை 6 அதிமுக எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். 
 
இந்நிலையில், சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டிற்கு வேலூர் எம்.பி.செங்குட்டுவன் மற்றும் திண்டுக்கல் எம்.பி. உதயகுமார் ஆகியோர் நேரில் சென்று தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். இதன் மூலம், தினகரனை அதிகரிக்கும் எம்.பிக்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
 
இந்த விவகாரம் முதல்வர் பழனிச்சாமி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாய், தம்பி முன்னிலையில் சிறுமி கொடூர பலாத்காரம்!