Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு – குற்றவாளிகள் பிடிபட்டதால் போலீஸார் நேர்த்திக்கடன் !

Webdunia
புதன், 16 அக்டோபர் 2019 (13:52 IST)
திருச்சியில் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் லலிதா ஜூவல்லரியில் கொள்ளை அடித்த கும்பல் சிக்கியதை அடுத்து போலிஸார் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.

கடந்த ஜனவரி 28ஆம் தேதி, திருச்சி சமயபுரம் அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியில் 470 பவுன் தங்க நகைகளும், ரூ.19 லட்சமும் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் போலிஸார் இரவு பகலாக தேடி வந்தனர். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் திருச்சி லலிதா ஜூவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இவ்விருக் கொள்ளையிலும் ஒரே மாதிரி முகமூடி அணிந்து திருடிய வீடியோக் காட்சிகள் சிக்கியதால் ஒரே கும்பல்தான் இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டிருக்கும் என சந்தேகிக்கப்பட்டது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட சுரேஷ், மணிகண்டன் ஆகியோர் முதலில் சிக்க பின்னர் கூட்டத்தலைவன் திருவாரூர் முருகன் பெங்களூருவில் சரணடைந்துள்ளார். இதையடுத்து இரு வழக்குகளிலும் முக்கியத் திருப்பம் ஏற்பட்டதால் திருச்சி காவலர்கள் ஹரிஹரன், விஜயகுமார் ஆகியோர் மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments