சென்னையில் பைக் பந்தயத்தால் நேர்ந்த சோகம்: மெதுவாக சென்றும் விபத்தில் சிக்கி பலியான பரிதாபம்..!

Mahendran
வியாழன், 6 நவம்பர் 2025 (10:14 IST)
சென்னை, ராயப்பேட்டை பீட்டர்ஸ் மேம்பாலத்தில் இளைஞர்கள் சிலர் ஈடுபட்ட அதிவேக பைக் ரேஸ் காரணமாக நிகழ்ந்த விபத்தில், இரு பெண் குழந்தைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
உயிரிழந்தவர் ஹெல்மெட் அணிந்து, சாலையின் ஓரங்களில் மெதுவாக வந்தபோதும், மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மோதியதால் விபத்தில் சிக்கினார். விபத்துக்கு பிறகு இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
 
விபத்தை நேரில் கண்ட பொது மக்கள், "அநியாயம் செய்கிறார்கள் இந்த இளைஞர்கள்! உயிரிழந்த அவரது குடும்பத்தை இனி யார் காப்பாற்றுவது?" என ஆவேசத்துடன் கேள்வியெழுப்பினர். இதுபோன்ற சட்டவிரோத பைக் ரேஸ்களை நிரந்தரமாக தடுக்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 
 
சட்டத்தின் பிடியில் இருந்து இத்தகைய பந்தயதாரர்கள் தப்பக் கூடாது என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபத்துக்கள் அதிகம் நடப்பதற்கு காரணம் நல்ல சாலைகள் தான்.. பாஜக எம்பியின் சர்ச்சை கருத்து..!

திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து பேரணி. மறுநாளே மம்தா பானர்ஜிக்கு விண்ணப்பம் வழங்கிய பூத் அதிகாரி

டிரம்ப் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது: அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிர்ச்சி கருத்து..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments