Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பும் பொதுமக்கள்.. காவல்துறையின் முக்கிய கட்டுப்பாடுகள்..!

Mahendran
சனி, 18 ஜனவரி 2025 (08:46 IST)
பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் தற்போது சென்னை திரும்பி கொண்டிருக்கும் நிலையில், காவல்துறை சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவை பின்வருமாறு:
 
வெளியூரிலிருந்து சென்னை வரும் கனரக வாகனங்கள் பரணூர் சந்திப்பில் திரும்பி ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
சென்னை நோக்கி வரும் சாதாரண வாகனங்கள் எஸ்பி கோயில் X ஒரகடம் சந்திப்பில் திரும்பி ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்ல வேண்டும்.
 
திருப்போரூர் வழியாக சென்னைக்குள் நுழையும் கனரக வாகனங்கள், செங்கல்பட்டு வழியாக பயணம் செய்ய வேண்டும்.
 
ஜிஎஸ்டி, ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் கனரக வாகனங்கள், திங்கட்கிழமை வரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
பல்லாவரம் புதிய பாலத்தில் திங்கட்கிழமை 12:00 மணி வரை, சென்னை நோக்கி ஒரு வழி போக்குவரத்து ஏற்பாடு செய்யப்படும். 
 
ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து விரைவாக்க, ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலை வழியாக திருப்பி விடப்படும்.
 
இந்த கட்டுப்பாடுகளை வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டும் என்றும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

வீடு, வாகனக் கடன்கள் வாங்கியுள்ளீர்களா? RBI அறிவித்த அசத்தல் அறிவிப்பு..!

மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

குடிநீர் பாட்டில்களில் ரசாயனம்.. தரமற்ற குடிநீர் விற்பனை! - அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டுக்கு புரோட்டாவுக்கு இப்படி ஒரு புகழா? உலக அளவில் சிறந்த உணவாக தேர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments