ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தில் 58 வேட்பாளர்கள்.. இன்று வேட்புமனு பரிசீலனை..!

Mahendran
சனி, 18 ஜனவரி 2025 (08:45 IST)
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான மனு தாக்கல் செய்யும் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.
 
நேற்று கடைசி நாளில் திமுக வேட்பாளரும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரும் மனு தாக்கல் செய்தனர். மொத்தம் 58 பேர் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று முதல் வேட்பாளர்களின் பரிசீலனைகள் செய்யப்படவுள்ளதாகவும், வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஜனவரி 20 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதன்பின் இறுதி வேட்பாளர் பட்டியல், வேட்பாளர்களின் சின்னத்துடன் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி போட்டியிடுகிறார். இந்த இருவரைத் தவிர, மற்ற வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
 
குறிப்பாக, நேற்று ஒரே நாளில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை சேர்த்து மொத்தம் 49 பேர் மனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments