Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குற்றாலத்தில் கனமழை: தண்ணீருடன் மண் கலந்து வருவதால் குளிக்க தடை..!

குற்றாலத்தில் கனமழை: தண்ணீருடன் மண் கலந்து வருவதால் குளிக்க தடை..!
, செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (19:16 IST)
குற்றாலத்தில் கன மழை பெய்து வருவதை அடுத்து தண்ணீருடன் மண் கலந்து வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை உள்பட கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் நேற்று திடீரென மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாகவும் மற்ற அருவிகளிலும் அதிகமான அளவில் தண்ணீர் வந்ததாகவும் தெரிகிறது. 
 
குறிப்பாக ஐந்தருவியில் அதிகளவில் தண்ணீர் மண் கலந்து வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றுவதுடன் திரும்பி செல்கின்றனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’என்.ஐ.ஏ எந்த சம்மனும் எனக்கு அனுப்பவில்லை'.- வரலட்சுமி சரத்குமார் விளக்கம்