Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’என்.ஐ.ஏ எந்த சம்மனும் எனக்கு அனுப்பவில்லை'.- வரலட்சுமி சரத்குமார் விளக்கம்

’என்.ஐ.ஏ எந்த சம்மனும் எனக்கு அனுப்பவில்லை'.- வரலட்சுமி சரத்குமார் விளக்கம்
, செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (19:02 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார். இவருக்கு தேசிய  புலனாய்வு முகமை இன்று சம்மன் அனுப்பியுள்ளதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் போடாபோடி,  சண்டக்கோழி 2, சர்க்கார், தாரைதப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், போதைப் போருட்கள் கடத்ததல் தொடர்பாககத் தேசிய புலனாய்பு முகமை (என்.ஐ.ஏ) இவருக்கு சம்மன் அனுப்பியதாக தகவல் பரவியது.

அதாவது, கடந்த 2021 ஆம் ஆண்டு கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ ஹெராயின் போதைப் பொருட்கள்  மற்றும் ஏகே 47 துப்பாக்கிகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆதிலிங்கம், வரலட்சுமியின் உதவியாளராக இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இவ்வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபற்றி விசாரிக்க திட்டமிட்டு நடிகை வரலட்சுமிக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  நடிகை வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார். அதில், ’’என்.ஐ.ஏ எனக்கு சம்மன் அனுப்பியதாக பரப்பப்படும் தகவல் அனைத்தும் பொய்யானவை’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’என்.ஐ.ஏ எந்த சம்மனும் எனக்கு அனுப்பவில்லை. நேரில் ஆஜராக வேண்டும் என்று எதுவும் எனக்கு வரவில்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிலிங்கம் என்னிடம் பிரீலான்ஸ்ஸ் மேலாளராக பணியாற்றினார். அதேகாலகட்டத்தில் பல பிரீலான்ஸ்ர்களுடன் நான் பணியாற்றினேன். அவர் சென்றபின், அவருடன் தொடர்புகொள்ளவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

.6 கோடி உஜ்வாலா பயனாளிகள், ஒரு சிலிண்டருக்கு ₹400 மானியம் பெறுவர் - அண்ணாமலை