Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Advertiesment
courtralam
, வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (20:19 IST)
குற்றால அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் காலமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றனர்
 
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக திடீரென குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
 
மெயின் அருவி ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மொத்தமுள்ள நான்கு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது என்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சத்தியமங்கலம் கூலி தொழிலாளி வீட்டிற்கு ரூ. 94 ஆயிரம் மின்சார பில்: ஷாக் கொடுத்த மின்சார வாரியம்