Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி எப்போது? அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (13:13 IST)
ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி எப்போது?
கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 7 மாதங்களாக இருந்துவரும் நிலையில் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அனைத்து சுற்றுலா தளங்களும் முடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை சுத்தமாக நின்று போனதால் அதனை நம்பி வாழ்ந்த ஏராளமான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மத்திய மாநில அரசுகள் அறிவித்து வரும் தளர்வுகள் காரணமாக சுற்றுலாத் தலங்கள் ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டு வருகின்றன. தாஜ்மஹால் உள்பட பல சுற்றுலா தளங்கள் ஒரு சில நிபந்தனைகளோடு திறக்கப்பட்டு தற்போது சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பொது முடக்கம் காரணமாக 7 மாதங்களாக முடங்கியிருந்த ஒகேனக்கல்லில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி என தர்மபுரி ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார் 
 
ஒகேனக்கல் சுற்றுலாதளத்தில் ஏழு மாதத்திற்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் சீரடைய வழி வகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments