Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகள் எவை எவை? தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகள் எவை எவை? தேர்தல் ஆணையம் அறிவிப்பு
, வியாழன், 22 அக்டோபர் 2020 (12:59 IST)
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் ஒருசில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன என்பது தெரிந்ததே. இதன்படி பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகள் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதன் விபரங்கள் பின்வருமாறு
 
1. செங்கல்பட்டு மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதிகள்: சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் 
 
2. காஞ்சிபுரம் மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதிகள்: ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் 
 
3. திருப்பத்தூர் மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதிகள்: வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் 
 
4. வேலூர் மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதிகள்: காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கீழவைத்தியனாங்குப்பம் 
 
5. ராணிப்பேட்டை மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதிகள்: அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு
 
6. விழுப்புரம் மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதிகள்: செஞ்சி, மைலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் 
 
7. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதிகள்: உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி
 
8. நெல்லை மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதிகள்: நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் 
 
9. தென்காசி மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதிகள்: சங்கரன்கோவில்(தனி), வாசுதேவநல்லூர்(தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்லா பட்டப்படிப்புக்கும் நுழைவு தேர்வு நடத்த முடியாது! – மத்திய அரசுக்கு கடிதம்!