Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன கோபாலு.. இந்த பக்கம்! ஆட்டை திருடி உரிமையாளரிடமே விற்ற திருடன்!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (13:01 IST)
மதுரையில் ஆடு திருடன் ஒருவர் ஆட்டை திருடி அதன் உரிமையாளர்களிடமே விற்க முயன்று சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடிவேலு காமெடி ஒன்றில் கோபால் என்ற நபரிடம் ஆடு திருடி மாட்டுவது போன்ற ஒரு சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. மதுரை நாகமலை அருகே உள்ள கீழமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பணன். இவருக்கு சொந்தமான ஆட்டு மந்தையிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் 6 ஆடுகள் திருடு போயுள்ளன. இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.

இந்நிலையில் கருப்பணனின் சகோதரர் ஒருவரிடம் பாலமுருகன் என்ற நபர் ஆடுகளை விற்க வந்துள்ளார். 6 ஆடுகளையும் அடிமட்ட விலைக்கு தர பாலமுருகன் ஒப்புக்கொண்டது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே இதுகுறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்

பாலமுருகனை பிடித்து போலீஸார் விசாரித்தபோது ஆடுகளை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். இதற்காக ஒரு டெம்போ வாகனம் வைத்துள்ள பாலமுருகன் ஆடுகளை டெம்போவில் திருடி கிடைக்கும் விலைக்கு விற்று வந்தது தெரிய வந்ததையடுத்து போலீஸார் பாலமுருகனை கைது செய்துள்ளனர்.

ஆட்டை திருடி அதன் உரிமையாளர்களிடமே விற்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments