Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாவம் திருமாவளவன்.. சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துவிட்டார்! - வருந்திய எடப்பாடி பழனிசாமி!

Prasanth K
ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2025 (11:18 IST)

திமுகவின் ஆட்சியில் ஏற்படும் பிரச்சினைகளில் திருமாவளவன் அமைதி காத்து வருவதாகவும், நெருக்கடிக்கு உள்ளாகி வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

 

சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவ்வாறாக திருவண்ணாமலையில் மக்களிடையே பேசிய அவர் “அதிமுக ஆட்சியில் இருந்தபோது தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால் இப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களை ஸ்டாலின் அரசு கைது செய்திருக்கிறது.
 

திமுகவின் செயல்களுக்கு திருமாவளவன் வக்காலத்து வாங்குகிறார். திமுகவின் பாவ மூட்டைகளை திருமாவளவன் சுமக்க வேண்டாம். கள்ளச்சாரயம் அருந்தி 68 பேர் இறந்தபோது நான் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆதரவு கூறினேன். அப்போது மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக திருமாவளவன் அறிவித்தார். பின்பு திமுக கொடுத்த நெருக்கடியால் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு என பெயர் மாற்றினார். பாவம் திருமாவளவன். சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துவிட்டார்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேளாண்சார் தொழில்களுக்கு மகத்தான எதிர்காலம்! ஈஷா அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா 2.O

ராகுல்காந்தி இந்திய அரசியலமைப்பையே அவமதித்துவிட்டார்! - தேர்தல் ஆணையர் வேதனை!

காதலியின் கைப்பிடிக்க மனைவி கொலை! திருட்டு என நாடகமாடிய பாஜக உள்ளூர் தலைவர்!

திருமாவளவனுக்கு சமூகநீதி தேவையில்ல.. தேர்தல் சீட்தான் தேவை! - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

முன்பு வாக்கு திருட்டு தெரியாமல் இருந்தது, ஆனால் இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments