Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களில்?

Prasanth Karthick
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (15:59 IST)

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நாளை சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னை அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முதலாகவே பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையால் 40 செமீ மழையை எல்லாம் தாங்க முடியாது… 15 செமீ-தான் லிமிட் – பிரதீப் ஜான் எச்சரிக்கை!

உதவி வேண்டுவோர் தேமுதிக கட்சி அலுவலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்… பிரேமலதா அறிவிப்பு!

சென்னையில் 6 செ.மீ மழை மட்டுமே மழையா? தவறான தகவல் பரப்ப வேண்டாம்..!

அடுத்த மூன்று மணிநேரத்தில் 20 செமீ மழை … அலுவலம் வந்தவர்கள் வீடு திரும்புங்கள் –வெதர்மேன் எச்சரிக்கை!

சென்னை அருகே கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments