Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மழையால் பாதிக்கப்படுபவர்கள் கேப்டன் ஆலயத்தில் தங்கலாம்! - பிரேமலதா விஜயகாந்த அறிவிப்பு!

Premalatha

Prasanth Karthick

, செவ்வாய், 15 அக்டோபர் 2024 (11:14 IST)

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் மழையால் பாதிக்கப்படும் மக்கள் தேமுதிக அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்) தங்கலாம் என பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

 

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மாலை முதலாக கனமழை பெய்யத் தொடங்கிய நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில் கனமழையால் வீடுகளில் வசிக்க முடியாத மக்கள், உதவி தேவைப்படுபவர்கள் தேமுதிக அலுவலகத்தை (கேப்டன் ஆலயம்) தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனமழை எதிரொலி: திருச்சி மாவட்ட மக்களுக்கான கட்டணமில்லா உதவி எண்கள் அறிவிப்பு..!