விமான நிலையத்தில் ரூ.57.93 லட்சம் மதிப்பிலான நகைகள், பணத்தாள்கள் பறிமுதல்!

J.Durai
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (15:41 IST)
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அனுமதியின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.57.93  லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தாள்கள் மற்றும் சிறு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 
 
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட தயாராக இருந்த பேட்டிக் ஏர்வேஸ் விமானத்தில் செல்ல விழுந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத் துறை வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனைக்குள் படுத்தினார். 
 
இதில் பயணி ஒருவர் உரிய அனுமதியின்றி பல்வேறு வெளிநாட்டு பணத்தாள்களை உடைமைகளுக்குள் மறைத்து எடுத்து செல்ல இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் பயணியையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
 
இதன் மதிப்பு ரூ.49.11 லட்சம் ஆகும். 
இதேபோல் மற்றொரு பயணி 124 கிராம் எடையில் 552 எண்ணிக்கையிலான சிறு சிறு மூக்குத்திகள், தோடுகள் உள்ளிட்டவற்றை உடைமைகளுக்குள் மறைத்து கடத்திச் செல்லவிருந்தது தெரியவந்தது. அவற்றையும் பறிமுதல் செய்து பயணியிடம் விசாரித்து வருகின்றனர்.
 
பறிமுதல் செய்த நகைகளின் மதிப்பு ரூ.8.82 லட்சமாகும்.
இதன்படி மொத்தம் ரூ.57.93 லட்சம் மதிப்பிலான நகைகள் பணத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments