Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிலையத்தில் ரூ.57.93 லட்சம் மதிப்பிலான நகைகள், பணத்தாள்கள் பறிமுதல்!

J.Durai
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (15:41 IST)
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அனுமதியின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.57.93  லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தாள்கள் மற்றும் சிறு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 
 
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட தயாராக இருந்த பேட்டிக் ஏர்வேஸ் விமானத்தில் செல்ல விழுந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத் துறை வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனைக்குள் படுத்தினார். 
 
இதில் பயணி ஒருவர் உரிய அனுமதியின்றி பல்வேறு வெளிநாட்டு பணத்தாள்களை உடைமைகளுக்குள் மறைத்து எடுத்து செல்ல இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் பயணியையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
 
இதன் மதிப்பு ரூ.49.11 லட்சம் ஆகும். 
இதேபோல் மற்றொரு பயணி 124 கிராம் எடையில் 552 எண்ணிக்கையிலான சிறு சிறு மூக்குத்திகள், தோடுகள் உள்ளிட்டவற்றை உடைமைகளுக்குள் மறைத்து கடத்திச் செல்லவிருந்தது தெரியவந்தது. அவற்றையும் பறிமுதல் செய்து பயணியிடம் விசாரித்து வருகின்றனர்.
 
பறிமுதல் செய்த நகைகளின் மதிப்பு ரூ.8.82 லட்சமாகும்.
இதன்படி மொத்தம் ரூ.57.93 லட்சம் மதிப்பிலான நகைகள் பணத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கர்நாடக முதல்வர் சித்தராமையா மாற்றப்படுகிறாரா? புதிய முதல்வர் டிகே சிவகுமார்?

சென்னை புதிய தாழ்தள மின்சார பேருந்துகள்: எந்தெந்த வழியாக செல்லும்? பேருந்து எண் என்ன? - முழுமையான விவரங்கள்!

நாட்டு துப்பாக்கிகளுடன் சுற்றி திரிந்த பீகார் வாலிபர்கள்.. திருப்பூரில் பரபரப்பு..!

சீட் பெல்ட், செல்போன் சார்ஜிங்.. முதல்வர் இன்று ஆரம்பித்து வைத்து மின்சார பேருந்தில் என்னென்ன வசதிகள்?

10 வயது மகனுக்கு கத்திக்குத்து.. அதன்பின் தவறை உணர்ந்து மருத்துவமனைக்கு தூக்கி சென்ற தந்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments