Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிலோ ரூ.90 - தக்காளி விலை கிடுகிடு உயர்வு!

Webdunia
சனி, 14 மே 2022 (08:23 IST)
வெளி மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கனமழையால் தக்காளி வரத்து குறைந்த நிலையில் கிலோ 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்றது. ஆனால் கடந்த மாதம் இந்த நிலைமை தலைகீழாக மாறியது. விவசாயிகள் பலரும் தக்காளி பயிர் செய்திருந்த நிலையில் எதிர்பார்த்த விளைச்சல் கிடைத்தது. இந்நிலையில், தற்போது பெய்த திடீர் மழை காரணமாக அந்த பகுதிகளில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. 
 
இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்துள்ளதாம். 2 வாரங்களுக்கு முன்பு 1 கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments