Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

600க்கும் குறைவான கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் நிம்மதி

Advertiesment
600க்கும் குறைவான கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் நிம்மதி
, வியாழன், 24 பிப்ரவரி 2022 (19:48 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் இன்று 600க்கும் விட குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 575 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,47,581 என்றும் அறிஒவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,913 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 144 என்றும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 65,988 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்