Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 மணி நேரத்தில் 9 மாவட்டகளில் மழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

3 மணி நேரத்தில் 9 மாவட்டகளில் மழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!
, புதன், 20 ஜூலை 2022 (08:34 IST)
தென்கிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து வரும் நிலையில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அடுத்த 3 மணி நேரத்திற்குள் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த வழக்கு: இன்று தீர்ப்பு