Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாவட்டவாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

மாவட்டவாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
, வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (18:31 IST)
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் இன்று திடீரென தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது என்பதை சற்றுமுன் பார்த்தோம். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1755 உயர்ந்துள்ளது.
 
இந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 72 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 52 பேர்கள்  சென்னையில் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகம் என்பதும் இதன்மூலம் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சென்னையில் மொத்த கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை 452ஆக உயர்ந்துள்ளது.
 
 
சென்னையை அடுத்து இன்று கோவையில் 7 பேர்களும், மதுரையில் 4 பேர்களும், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா இருவரும் காஞ்சிபுரம், சேலம், தென்காசி மற்றும் விருதுநகர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் மேலும் 72 பேர்களுக்கு கொரோனா: சென்னையில் மட்டும் 52 பேர்