Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக உயர்ந்த அகவிலைப்படி! தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (18:58 IST)
தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவித்து தமிழக அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த ஜூலை 1ஆம் தேதி முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
 
சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசும் மத்திய அரசின் ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வை அறிவிப்பு செய்துள்ளது. இதனால் தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 
இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏற்கனவே 12 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது அதனுடன் மேலும் 5 சதவீதம் உயர்த்தி மொத்தம் 17 சதவீதமாக அகவிலைப்படி உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்னும் பத்து நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு இந்த மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments