Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர் விடுதலை: தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (11:39 IST)
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அடுத்து 10 வருடங்கள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர்களை விடுதலை செய்ய தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. 
 
ஆனால் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியான திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியபோது 'பேரவை நடைபெற்றுவரும் நிலையில் ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர் விடுப்பை பேரவையில் அறிவிக்காதது ஏன்? என்றும் இந்த தகவலை செய்தி வெளியீடாக அறிவித்துள்ளது மரபுதானா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
ஆனால் இதுகுறித்து தமிழக அரசு விளக்கமளிக்கையில், 'உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி கவர்னருக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இந்த 67 பேர்களை விடுதலை செய்வதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. விடுதலை செய்யப்படும் 67 பேர்கள் கொண்ட பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments