Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா பிறந்த நாளில் சிறை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு!

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2018 (19:26 IST)
இறந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களை அவர்களது வழக்கிற்கு ஏற்ப விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
 
கடந்த தேர்தலின் போது ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளில் ஒன்று சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கைதிகளை விடுதலை செய்வது. இதனை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நிறைவேற்ற உள்ளது.
 
சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்று வருபவர்களை நன்னடத்தை மற்றும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஜெயலலிதாவின் பிறந்த நாளில் நிறைவேற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
 
இதற்காக கைதிகளின் விவரங்களை 9 மத்திய சிறைச்சாலைகளிலும் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது தமிழக அரசு. 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை அவர்களது வழக்கிற்கு ஏற்றது போலவும், 60 வயதுக்கு மேல் சிறையில் 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments