Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மே 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை – பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!

Advertiesment
Tamilnadu
, புதன், 28 ஏப்ரல் 2021 (15:56 IST)
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மே 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும் அலுவல் பணிகள் காரணமாக ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று வரவேண்டிய சூழல் இருந்தது.

இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் மே 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளத். மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்படும் வரை தேவையான அறிவுறுத்தல்களை வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் 50 விமானங்கள் ரத்து…