Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலை வழக்கில் தப்பிய ஆசாமி; வழிப்பறியில் சிக்கிய சம்பவம்!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (12:04 IST)
திருப்பூரில் இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் வழிப்பறி செய்ய முயன்றபோது சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் யுனிவர்சல் தியேட்டர் ரோட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை வழிமறித்த ஆசாமி, கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொடுக்குமாறு மிரட்டியுள்ளார்.

இளைஞர் மறுக்கவே அவரது கையில் கத்தியால் கிழித்துள்ளார் அந்த ஆசாமி. இதனால் இளைஞர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இளைஞர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழிப்பறி ஆசாமியை பிடித்துள்ளனர்.

பிடிபட்டவர் திருப்பூர் மண்ணரையை சேர்ந்த ராஜசேகர் என தெரிய வந்துள்ளது. மேலும் அவர் மீது இரட்டை கொலை வழக்கு உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும், ஜாமீனில் வெளிவந்த அவர் தலைமறைவாக இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்துள்ள போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments