Publish Date: Tue, 26 Apr 2022 (12:15 IST)
Updated Date: Tue, 26 Apr 2022 (12:24 IST)
ஜேசிபி இயந்திராத்தால் அடித்து நொறுக்கி ஏடிஎம் மிஷினில் கொள்ளை!
ஏடிஎம் மெஷின் உள்ள பணத்தை பல்வேறு நூதன வழிகள் மூலம் திருடர்கள் கொள்ளையடித்து வரும் நிலையில் மர்ம கும்பல் ஒன்று ஏடிஎம் இயந்திரத்தை ஜேசிபி இயந்திரத்தால் அடித்து நொறுக்கி அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர்
மகாராஷ்டிர மாநிலத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஏடிஎம் இயந்திரத்தை ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் ஜேசிபி உதவியால் அடித்து நொறுக்கியுள்ளனர்
அதன்பின்னர் அந்த இயந்திரத்தில் இருந்து 27 லட்ச ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்
இதுகுறித்த சிசிடிவி காட்சி இணையதளங்களில் வைரலாக வருவதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்