Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாஸ்க் இல்லைனா அபராதம்; ரூல்ஸ் இல்லைனா சீல்! – திருநெல்வேலி போலீஸ் எச்சரிக்கை!

Advertiesment
Tamilnadu
, வியாழன், 16 டிசம்பர் 2021 (08:33 IST)
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி காவல்துறை கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்புகள் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவிலும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்புகள் எதுவும் உறுதியாகாத நிலையில் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மக்களிடையே மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி போன்றவை குறைந்து வரும் நிலையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் மாஸ்க் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும், கடைகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரியங்கா கலந்து கொண்ட கூட்டத்தில் திடீர் ஆர்ப்பாட்டம்: அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்